இலங்கையின் அபாய பிரதேசங்கள் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு மற்றும் பருத்திதுறைக்கு அருகில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கு பிரவேசிக்கும். இதன் காரணமாக நாளை மறுதினம் வரையில் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ------------------ கொவிட் -19 பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம்,என்ற நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளதாகவும். 2 நீதியரசர்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தமையால், வழக்கு விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ------------------ கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது. புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர். G. C. E. O/L Examination cannot be held as scheduled and a new date will be announced 06 weeks ahead of the examination : Education Minister ------------------ 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK